top of page
  • Facebook
  • Twitter
  • Instagram

அக அமைதி தியானம்: கூட்டுத் தியானப் பயிற்சி வகுப்புகள்

இணைய வழி தியானப் பயிற்சி வகுப்புகள்


ஒவ்வொரு மாதமும், சமூக நல்மாற்றத்திற்கான முன்னெடுப்பாக, இணைய வழி தியானப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்புகள் அக அமைதி தியானத்தின் வாயிலாக நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொண்டு பயனடைந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.


பயிற்சி வகுப்பின் முக்கியத்துவம்


ஒவ்வொரு வகுப்பிலும், மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள், பொறியாளர்கள், குடும்பத் தலைவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், சுய தொழில் முனைவோர் எனப் பலரையும் சந்திக்கிறேன். அவர்கள் தங்கள் பயிற்சி அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். இதன் மூலம், அக அமைதி தியானப் பயிற்சிகள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்பதனை அறிய முடிகிறது.


கட்டணமில்லா இணைய வழி தியானப் பயிற்சி வகுப்பிற்கு உங்களை வரவேற்கிறேன்.


கூட்டுத் தியானப் பயிற்சி அறிமுகம்


கூட்டுத் தியானப் பயிற்சி வகுப்புகள்


பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள, பின்வரும் இணைய முகவரியைப் பயன்படுத்தி பதிவு செய்யுங்கள்: கூட்டுத் தியானப் பயிற்சிக்கு பதிவு செய்க.


பயிற்சி வகுப்பிற்கு கட்டணம் ஏதுமில்லை. பங்களிப்பு செய்ய விரும்புவோர் மட்டும் பங்களிப்பு செய்யலாம். அதற்கான GST ரசீது உங்களுக்கு உடனே உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.


உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களைப் பயிற்சி வகுப்பில் சந்திக்க விரும்புகிறேன்.


டிசம்பர் மாதம் நடைபெறும் தியானப் பயிற்சி வகுப்புகள்


2, 9, 15 டிசம்பர், இரவு 8 மணி, செவ்வாய்க் கிழமை



அக அமைதி தியானத்தின் பதிவு செய்யப்பட்ட பயிற்சி வகுப்புகளைப் பற்றி மேலும் அறிந்து பயன் பெறுங்கள்.


பதிவு செய்யப்பட்ட வகுப்புகள்


நேரமின்மை காரணமாக இணைய வழி வகுப்பில் கலந்து கொள்ள இயலாமல் இருப்பவர்களுக்காகவும், தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் தியானப் பயிற்சியை தமது இல்லத்தில் இருந்து கற்றுக் கொள்ள விரும்புவோருக்கும் உதவும் வகையில் பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனோடு பல்வேறு வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த கட்டணத்தில் உங்கள் இல்லத்தில் இருந்தவாறே குடும்பத்தோடு கற்றுக் கொண்டு பயன் பெறுங்கள்.


ஏன்?


இன்றைய சமூகச் சூழலை முழுவதுமாக கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் சந்தித்து வரும் பல்வேறு சவால்களுக்கு ஒரு நல்ல தீர்வை தியானப் பயிற்சிகள் வழங்கும் என்ற முழு நம்பிக்கையுடன் இந்த பயிற்சி வகுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. அடிப்படை நோக்கம் "சமூக நல்மாற்றத்திற்கான பங்களிப்பை தியானப் பயிற்சிகளை மக்களுக்கு கற்றுத் தருதல்".


தியான முறைகள்


இணைய வழி தியானப் பயிற்சிகளில் நாம் ஆனா பானா சதி, விபாசனா என்ற இரண்டு தியான முறைகளைக் கற்று, பயிற்சி செய்வதோடு அவற்றை நம் வாழ்வியல் மேம்பாட்டிற்கு எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதனையும் அறிந்து கொள்வோம்.


பயிற்சி திட்டம்


2025 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள பயிற்சிகள் அனைத்தும் அனைவருக்கும் பயன் தரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. பொதுவாக இவை 1 நாள், 3 நாள், 5 நாள், 7 நாள், 10 நாள் வகுப்புகளாக திட்டமிடப்பட்டுள்ளன. பெண்களுக்கான சிறப்பு 1 நாள் மற்றும் 3 நாள் பயிற்சி வகுப்புகளும் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு இணைய வழியிலும் 3, 5, 7, 10 நாள் பயிற்சி வகுப்புகள் பதிவு செய்யப்பட்ட வகுப்புகளாகவும் ஜுலை மாதம் முதல் வழங்கப்படுகிறது.



10 நாள் பயிற்சி தியானப் பயிற்சி


பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்த நாள் முதல் உடனடியாக கற்று பயிற்சி செய்யத் துவங்கலாம்: 10 நாள் பயிற்சி தியானப் பயிற்சி.



5 நாள் பயிற்சி தியானப் பயிற்சி


பதிவு செய்த நாள் முதல் உடனடியாக கற்று பயிற்சி செய்யத் துவங்கலாம். விரைவில் அதற்கான தகவல் இங்கே பகிரப்படும்: 5 நாள் பயிற்சி தியானப் பயிற்சி.



3 நாள் பயிற்சி தியானப் பயிற்சி


பதிவு செய்த நாள் முதல் உடனடியாக கற்று பயிற்சி செய்யத் துவங்கலாம். விரைவில் அதற்கான தகவல் இங்கே பகிரப்படும்: 3 நாள் பயிற்சி தியானப் பயிற்சி.



பெண்களுக்கான பயிற்சி வகுப்புகள்


3 நாள் பயிற்சி தியானப் பயிற்சி


பதிவு செய்த நாள் முதல் உடனடியாக கற்று பயிற்சி செய்யத் துவங்கலாம். விரைவில் அதற்கான தகவல் இங்கே பகிரப்படும்: 3 நாள் பயிற்சி தியானப் பயிற்சி (பெண்களுக்கு).





அன்புடன்,

ரா. மகேந்திரன்

அக அமைதி தியானம்

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page